இயற்கை - பூக்கள் வழிகாட்டிய ஓடை

பூக்கள் வழிகாட்டிய ஓடை

பூக்கள் வழிகாட்டிய ஓடையின் வழியே
நனைந்த புல்வெளிகளின் வாசத்தின் ஊடே
நனைந்த மண்ணில் நனைக்கின்ற பாதத்தின் சுகம்
இருள் படர்ந்த குகைகளில்
வெளவால்களின் தொங்கல்
திங்களின் மென்வெண்ணொளியால்
சிரிகின்ற மலர்கள் அழகு
ஒசைகளை ஓய்த்துவிட்டு
பேசுவதையும் நிறத்திவிட்டு
விரிந்த காதின் வழியே
நுழைந்த சப்தத்தை கவனித்தால்
இயற்கையின் சிரிப்போலி
பூமித் தாயின் கொலுசொலி
-    சிவதத்துவ சிவம்
25/05/2009

0 Response to "இயற்கை - பூக்கள் வழிகாட்டிய ஓடை"

Post a Comment

Powered by Blogger