இரவு சுமை

இரவு சுமை
இரவை யார் சுமப்பார்
கனவை அந்தக் கனவினில் தள்ளும்
இந்த இரவை யார் சுமப்பார்
ஓசைகளை ஓய்வினில் விட்டு விட்டு
ஓநாய்களை எழுப்பிவிடும்
இந்த இரவை யார் சுமப்பார்
ஆட்டங்கள் நின்ற பின்பும்
வாட்டங்களை வாசலில் வைத்தவர் யார்
போர்வைக்குள் பேரிரவை வைத்தவர் யார்
மேகத்தைக் கொண்டு பல கோலத்தை வானத்தில் தீட்டியவர் யார்
மோகத்தைக் கொண்டு பலர் தாகத்தைத் தூண்டியவர் யார்
நிலவை கொண்டு பலர் இரவை நீட்டியவர் யார்
தூங்கினால் காலத்தைக் கலைத்துவிடும்
விழித்துள்ளோர்களுக்கு காலத்தை மூட்டி விடும்
இந்த இரவை யார் சுமப்பார்
இருள் குடி கொண்டிருக்கும் காட்சியின் இடம்
மருள் குடி கொண்டிருக்கும் ஆட்சியின் இடம்
அருள் குடி கொண்டிருக்கும் சாட்சியின் இடம்
இடத்தை அடைந்தவன் இதயத்தை நிறைக்கும் இடமாம்
இடத்தை அடைய முடியாதவன் துடிக்கும் இடமாம்
இந்த இரவை யார் சுமப்பார்
-    சிவதத்துவ சிவம்
12/07/2017

0 Response to "இரவு சுமை"

Post a Comment

Powered by Blogger