வாழ்க்கை - கற்றுக் கொள்ளவேண்டும்
கற்றுக்
கொள்ளவேண்டும்
சோகங்களோடு
சிரிக்கவும்
சிரிக்கும்
போது சிந்திக்கவும்
தாழும்
போதுதான் உயர்வையும்
உயரும்
போதுதான் எளிமையையும்
அறிவை
திறந்தது முதலே ஒழுக்கத்தையும்
ஒழுக்கத்தோடு
வாழ சுத்தத்தையும்
புரியாத
போதுதான் தேடலையும்
தேடிடும்
போதே தேடியதை பதியவைக்கவும்
நினைத்த
நல்ல செயல்களை நிகழ்தவும்
நிகழ்த்தியதை
நிறைவாக்கவும்
இயலாத
போதுதான் தன் பலவீனத்தையும்
பலவீனத்தை
பலப்படுத்தவும்
பணத்தை
புண்ணியமாக்கவும்
புண்ணியத்தை
பெருக்கி கொள்ளவும்
உறவுகளோடு
நன்கு உறவாடவும்
உறவாடும்
போது விழிப்பையும்
அனுபவங்களை
வைத்து வாழ்க்கையையும்
வாழ்க்கை
முழுவதும் ஆண்டவனையும்
கற்றுக் கொள்ளவேண்டும்
- சிவதத்துவ சிவம்
03/12/2003