காதல் - பாரதி கண்ணம்மா



பாரதி கண்ணம்மா

நல்லதோர் காதல் கொண்டேன் - அதை
       நான் உனக்கு சொல்ல வருவேன்
சொல்லடி என் கண்ணம்மா - அந்த
   சுடர்மிகு சோதியை அணைத்திடுவாயோ

காற்றடை பந்தினை கண்ணம்மா - இன்னும்
       எத்தனை நாழி புனலினுள் அடைப்பேன்
சிற்றிடை கலைமகளே நீ - என்றன்
      ஜீவனில் பாதி கொண்டாய்

தீயினுள் வளர் சாம்பலாய் - நின்றன்
      பார்வையினால் பெற்ற காதலாம்
பாயினில் படுத்திருந்தும் - எந்தன்
      தூக்கத்தை தேடிடும் பாவியடி

சுருட்டிய கூந்தலுக்குள் - கண்ணம்மா
     சுகமாய் நான் சரண் புகுவேன் - நீ
உருட்டிடும் கருவிழி மை கொண்டு
  நான் ஓராயிரம் கவி புனைவேன்

உலகத்தின் தலைமை இன்பம் - ஆண்
      பெண் காதல் என்றான் பாரதி
கலக்கதை இனி விடுத்து - என்றன்
      காதலில் சேர்ந்திடுவாய் கண்ணம்மா
- சிவதத்துவ சிவம்

0 Response to "காதல் - பாரதி கண்ணம்மா"

Post a Comment

Powered by Blogger