காதல் - பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா
நல்லதோர் காதல் கொண்டேன் - அதை
நான் உனக்கு சொல்ல வருவேன்
சொல்லடி என் கண்ணம்மா - அந்த
சுடர்மிகு சோதியை அணைத்திடுவாயோ
காற்றடை பந்தினை கண்ணம்மா - இன்னும்
எத்தனை நாழி புனலினுள் அடைப்பேன்
சிற்றிடை கலைமகளே நீ - என்றன்
ஜீவனில் பாதி கொண்டாய்
தீயினுள் வளர் சாம்பலாய் - நின்றன்
பார்வையினால் பெற்ற காதலாம்
பாயினில் படுத்திருந்தும் - எந்தன்
தூக்கத்தை தேடிடும் பாவியடி
சுருட்டிய கூந்தலுக்குள் - கண்ணம்மா
சுகமாய் நான் சரண் புகுவேன் - நீ
உருட்டிடும் கருவிழி மை கொண்டு
நான் ஓராயிரம் கவி புனைவேன்
உலகத்தின் தலைமை இன்பம் - ஆண்
பெண் காதல் என்றான் பாரதி
கலக்கதை இனி விடுத்து - என்றன்
காதலில் சேர்ந்திடுவாய் கண்ணம்மா
- சிவதத்துவ சிவம்
0 Response to "காதல் - பாரதி கண்ணம்மா"
Post a Comment