சிவதத்துவ சிவம் கவிதைகள் அறிமுகம் பதிவு

சிவதத்துவ சிவம் கவிதைகள் அறிமுகம் பதிவு

தமிழ் மண்ணில்  பிறந்ததால் தமிழ் அறிந்து தொழிலின் தூண்டுதலால் ஆங்கிலம் கற்று சிந்தனைகளின் தூண்டுதாலால் தமிழ் மற்றும் ஆங்கில கவிதைகள் புனைந்து அதை குறைந்தளவு பொதுசபையிலும் தூவ எடுத்த வாய்ப்பு இந்த வலைபூ.

பாரதியாரிடம் இருந்த தேசிய கவிதைகள், காதல் கவிதைகள், ஆன்மீக கவிதைகள் என அவரின் ஒவ்வொரு வாழ்வியல் காலகட்டத்திற்கு தக்கவாறு அவரிடம் இருந்து பிறந்ததோ அது போல இவனின் ஒவ்வொரு வாழ்வியல் காலகட்டத்திற்கு தக்கவாறு கவிதைகள் பிறந்தன

ஒவ்வொரு கவிதைகளும் வெவ்வேறு அல்லது மாறுபட்ட கருத்துருக்களை சொல்வதாக அமைந்தாலும் அந்த ஒவ்வொரு கவிதைகளுக்கு அதற்கு அதற்கு  தக்க உயிர்ப்பு உண்டு.

கவிஞர்களின் சிந்தனை ஓட்டம் என்பது இரண்டு வகையில் வெளிப்படும் அதில் ஒன்று சமூக சூழல்களின் பிரதிபலிப்பு, இரண்டு அவனின் அகவெளிப்பாட்டின் பிரதிபலிப்பு இவை இரண்டுமே இதில் காணலாம்.

பூமி பந்தின் நாடக வசனங்களாக ஒவ்வொரு மக்களின் குரல்களும் ஒலித்து கொண்டிருக்க அதில் இதுவும் ஒன்றாக கடற்கரை மணல் வெளியில் எழுதப்படுவதை போல் இங்கே எழுதபடுகின்றது.

நன்றி
சிவதத்துவ சிவம்

எனது மற்ற வலைபதிவுகள்

0 Response to "சிவதத்துவ சிவம் கவிதைகள் அறிமுகம் பதிவு"

Post a Comment

Powered by Blogger