நம்பிக்கை - நம்பிக்கையை தேடுகிறேன்


நம்பிக்கையை தேடுகிறேன்

அருவாய் உருவாய் என் மனதின் முன் என் நம்பிக்கை
இதயத்தின் புறத்தை தீண்டும் ரம்பமாக
மறுசமயமோ
மனதை தூக்கி மகிழ்ச்சி கடலில் வீசி எறியும்
வேண்டும் என்றபோது எனை தொடாமல் நிற்கும்
என்னை விட்டுவிடு என்ற போது கட்டி அணைக்கும்
என் உடம்புக்குள்ளேயே தனித்த உயிர் என் நம்பிக்கை
நம்பிக்கையின் விரலை பிடித்து என் காலம் நடக்கிறது
மறுசமயமோ என்னை துண்டித்துக்கொள்கிறது
நான் வளர்த்தெடுத்த என் நிலா
என் வானத்திலேயே வர மறுக்கிறது
என் நம்பிக்கையே உன்னை
வைத்து தான் நான் வாழ்ந்தேன்
வறட்சியில் நிற்பவன் வசந்தத்தை தானே தேடுவான்
நானும் உன்னையே தேடுகிறேன்
மரங்கள் தோறும் அலைந்து கூடுகட்ட கிளை
தேடும் பறவை போல்
நகரும் நொடிகள் தோறும்
நான் உன்னையே தேடுகிறேன்
- சிவதத்துவ சிவம்

0 Response to "நம்பிக்கை - நம்பிக்கையை தேடுகிறேன்"

Post a Comment

Powered by Blogger