கண்ணீர் சந்நிதி
கண்ணீர் சந்நிதி
உணர்வுகள் வலிந்து இழுக்கப்படுகின்ற இடம்
எப்போதும் நிசப்தமான காற்றின் பயணம்
கடிகார முள்ளின் முடிவுறா காலம்
கண்ணீர் காய்ந்து போன கன்னம்
எந்த நகர்வும் செய்யாத சாமி சிலை
கார் மேகம் ஒரு துளியை கூட
சிந்தாமல் கலைந்து போகும்
நீண்ட பயணத்திற்கு பின் ஒரு நிறுத்தம்
எழுதிக் கொண்டிருக்கும் போதே இடப்பட்ட முற்றுப்புள்ளி
என் இறைவனுக்குள்ளும் தீண்டாமை
- சிவதத்துவ சிவம்
உணர்வுகள் வலிந்து இழுக்கப்படுகின்ற இடம்
எப்போதும் நிசப்தமான காற்றின் பயணம்
கடிகார முள்ளின் முடிவுறா காலம்
கண்ணீர் காய்ந்து போன கன்னம்
எந்த நகர்வும் செய்யாத சாமி சிலை
கார் மேகம் ஒரு துளியை கூட
சிந்தாமல் கலைந்து போகும்
நீண்ட பயணத்திற்கு பின் ஒரு நிறுத்தம்
எழுதிக் கொண்டிருக்கும் போதே இடப்பட்ட முற்றுப்புள்ளி
என் இறைவனுக்குள்ளும் தீண்டாமை
- சிவதத்துவ சிவம்
0 Response to "கண்ணீர் சந்நிதி"
Post a Comment