வாழ்க்கை - தந்தைக்கு மகன் கடிதம்
முதியோர் இல்லத்தில் இருக்கும் தந்தைக்காக மகன் எழுதுவது போல் அமைந்துள்ள கவிதை
தந்தைக்கு மகன் கடிதம்
அன்புள்ள அப்பாவிற்கு
உங்கள் மகன் எழுதிக் கொள்வது
இங்கு இருந்ததை விட நலமாக
இருப்பீர்கள் என நம்புகிறேன்
என் தாயின் நினைவை சுவைத்து கொண்டு
உங்கள் நினைவுகள் கூட இடைசொருகளாய்
வந்து போகும் என் வாழ்கையில்
நிமிடத்துளிகளைக் கூட நிறைவாகாமல்
நகர்த்து கிற என்வாழ்கையில்
என் மகன் தான்
என்னையும் உங்களையும்
அழுத்தமாக ஞாபகபடுத்தி விட்டான்
நானும் என் மனைவியும்
உங்கள் வாழ்கையின் மீது திணித்த
அலட்சியம்,நிராகரிப்பு,மரியாதையின்மையை
என் மகனும்
என் மீதும் பதியம் போட ஆரம்பித்துவிட்டான்
உலகம் மட்டும் சுருக்கி விடவில்லை
உறவுகளும் சுருக்கி விட்டது
என்று நிங்கள் அன்று சொன்ன வார்தைகள்
என் காதுகளுக்குள்ளே இப்போதேல்லாம்
கேட்டு கொண்டேயிருக்கிறது
பாரங்களையே உங்கள் மீது சுமத்திய மகன்
வரங்கள் வேண்டி கடிதம் எழுதுகிறேன்
உங்கள் அறை,படுக்கை,பயன்படுத்தும் பொருள்களை
வேறு யாருக்கும் விட்டு விட்டுச் செல்லாமல்
எனக்கே தர வேண்டுகிறேன்
நானும் பிற்காலத்தில் அங்கு தங்குவேன்
உங்களை போல்
உங்கள் நினைவை சுவைத்து கொண்டு
தந்தைக்கு மகன் கடிதம்
அன்புள்ள அப்பாவிற்கு
உங்கள் மகன் எழுதிக் கொள்வது
இங்கு இருந்ததை விட நலமாக
இருப்பீர்கள் என நம்புகிறேன்
என் தாயின் நினைவை சுவைத்து கொண்டு
உங்கள் நினைவுகள் கூட இடைசொருகளாய்
வந்து போகும் என் வாழ்கையில்
நிமிடத்துளிகளைக் கூட நிறைவாகாமல்
நகர்த்து கிற என்வாழ்கையில்
என் மகன் தான்
என்னையும் உங்களையும்
அழுத்தமாக ஞாபகபடுத்தி விட்டான்
நானும் என் மனைவியும்
உங்கள் வாழ்கையின் மீது திணித்த
அலட்சியம்,நிராகரிப்பு,மரியாதையின்மையை
என் மகனும்
என் மீதும் பதியம் போட ஆரம்பித்துவிட்டான்
உலகம் மட்டும் சுருக்கி விடவில்லை
உறவுகளும் சுருக்கி விட்டது
என்று நிங்கள் அன்று சொன்ன வார்தைகள்
என் காதுகளுக்குள்ளே இப்போதேல்லாம்
கேட்டு கொண்டேயிருக்கிறது
பாரங்களையே உங்கள் மீது சுமத்திய மகன்
வரங்கள் வேண்டி கடிதம் எழுதுகிறேன்
உங்கள் அறை,படுக்கை,பயன்படுத்தும் பொருள்களை
வேறு யாருக்கும் விட்டு விட்டுச் செல்லாமல்
எனக்கே தர வேண்டுகிறேன்
நானும் பிற்காலத்தில் அங்கு தங்குவேன்
உங்களை போல்
உங்கள் நினைவை சுவைத்து கொண்டு
- சிவதத்துவ சிவம்
0 Response to "வாழ்க்கை - தந்தைக்கு மகன் கடிதம்"
Post a Comment