ஆன்மீகம் - நீ பார்க்கிறாய்



நீ பார்க்கிறாய்


நீ பார்க்கிறாய்
நான் தவறு செய்கிறேன்
நீ பார்க்கிறாய்
நான் நேர்மையாகிறேன்
நீ பார்க்கிறாய்
செயல்படுகின்ற வெறுமையோடு
கவிதை அர்த்தப்படுவது காலத்தை பொருத்தது
கடவுள் அர்த்தப்படுவது ஞானத்தை பொருத்தது
நிலவு தெரியபடுவது நிலையை பொருத்தது
வாழ்க்கை தெரியபடுவது புரிதலையை பொருத்தது
என் ஒவ்வொரு செயலையும்
நீ பார்க்கிறாய்
நான் செயலற்று நிற்கும் போதும்
நீ பார்க்கிறாய்
விளைவுகளை நினைத்து கொண்டு
விலகி நிற்கிறேன்
விளைவுகளை கண்டு கொள்ளாமல்
மூழ்கி நிற்கிறேன்
நீ பார்க்கிறாய்
அறிவுரைக்கோ அதட்டலுக்கோ
நீ பார்க்கிறாய்
உன் மேல் பற்று இல்லாமல் விலகுகிறேன்
நீ பார்க்கிறாய்
ஓடி வந்து தழுவுகிறேன்
நீ பார்க்கிறாய்
குழந்தை இளமை முதுமை
வந்து வந்து போகிற வாழ்வில்
கோடை வசந்தம் குளிர்
வந்து வந்து போகிற வாழ்வில்
பொம்மலாட்டத்தில் பொம்மைக்கு சுய விருப்பமில்லை
மனதை நிலைபடுத்திக் கொள்ள கடவுளை தேடுவர்
அதை ஆத்மாவில் நிலைபடுத்திக் கொள்ள நானும் தேடுகிறேன்
நீ பார்க்கிறாய்
உதவுவதற்க்கோ உதறுவதற்க்கோ
-    சிவதத்துவ சிவம்
01/03/2005

0 Response to "ஆன்மீகம் - நீ பார்க்கிறாய்"

Post a Comment

Powered by Blogger