மௌன காதலி
மௌன
காதலி
பேசி பரிதவித்து – மனத்
தூசி துடைத்தெடுத்து – இறை
ஆசி அளிக்கவந்த – என்
நேசி மௌனத்தை – மனதால்
பூசி நின்றேன்
வம்பு வழங்கா வாக்கு மௌனம்
தெம்பு கொடுக்கும் தெளிவு மௌனம்
முன்பு பேசி சேர்த்த துயர் மௌனித்த
பின்பு பிறந்த பிள்ளை மனம் – நல்
பண்பு தரும் அன்பு மௌனம்
வாதம் செய்து வறண்ட நாக்கு
கேள்விகளிலே புரண்ட போக்கு
தேடி தந்ததென்ன எனக்கு
பூமி பந்தில் விழுந்ததெதற்கு
தூய இறையின் திருவடி தெடுவதற்கு
மௌனம் வேண்டும் இதை புரிவதற்கு
- சிவதத்துவ சிவம்
10/03/2004
0 Response to "மௌன காதலி"
Post a Comment