ஓவியமும் ஓவியர்களும்



ஓவியமும் ஓவியர்களும்

தூரிகையின் தீண்டல்கள் ஓவியம்
வர்ணங்களை ஆங்காங்கே குடியமர்த்தினால் ஓவியம்
கருப்பு வெள்ளை கண்களை வைத்துக் கொண்டு
வண்ணங்களால் வருடுகிறீர்கள்
மரங்களையே அதிகம் வரைகிறீர்கள்
ஓ அது பெரிய தூரிகை என்றோ
துணியில்லாததையும் துணிந்து வரைந்து விடும்
பிரம்மனின் பக்கத்து வீட்டுக்காரர்கள்
தூரிகை கொண்டு ஆயிரம் ஆயிரம்
கவிதை எழுதும் கவிஞர்கள்
- சிவதத்துவ சிவம்

0 Response to "ஓவியமும் ஓவியர்களும்"

Post a Comment

Powered by Blogger