வாழ்க்கை - மிச்சமில்லை



மிச்சமில்லை
சூரியன் உதித்ததும் இருள் மிச்சமில்லை
ஆணவம் அறுத்ததும் துன்பம் மிச்சமில்லை
காதல் வந்ததும் உறக்கம் மிச்சமில்லை
ஞானம் அடைந்ததும் ஆசை மிச்சமில்லை
கரை அடைந்ததும் தூய்மை மிச்சமில்லை
செல்பேசிக்குள் நுழைந்ததும் மௌனம் மிச்சமில்லை
டையை குறைத்ததும் நாணம் மிச்சமில்லை
தேவையை விட்டதும் ஏக்கம் மிச்சமில்லை
கணினிக்குள் சென்றதும் எல்லைகள் மிச்சமில்லை
உலகம் சுருங்கியதும் நேரங்கள் மிச்சமில்லை
உயிரை இழந்ததும் எதுவும் மிச்சமில்லை
- சிவதத்துவ சிவம்

 

தத்துவம் - ஒரு பறவையின் மரணம்

ஒரு பறவையின் மரணம்
     
புலப்பாடாத புலன் விலகல் மரணம்
 கட்டிட கலப்பு நகரங்களில்
  பறவைகளின் ஒய்வு நாற்காலி
   மின்சார கம்பிகள் தான்

இடைஞ்சலற்ற வெறுமையான வானத்துப்
  பரவெளியிலிருந்து நகர பறவைகளின்
   குட்டி சரணாலயம் மின்சாரகம்பிகள்

மீன் பிடித்து சாப்பிடமுடியாது ஆனால்
  மின் அடித்து சாகமுடியும்
    கண்முன் தொங்கும் அந்த பறவையின் மரணம்
      யாரை யாரையோ திட்டுகின்றன

இனங்கள் ஒப்பாரி வைத்துவிட்டு
  தன் வேலை பார்க்க கிளம்பிவிட்டன
   இப்போது அது பாக்டீரியாக்களும்
     வைரஸ்களும் மொய்க்கும் மரண மரம்

மனதில் பதிப்பித்திருந்த தத்துவார்த்தங்களை
 புரட்டுகின்ற வேளை கண்ணில் படுகின்றது
  ஒரளவில் நின்று விடுவது தான்
   உயிர்க்கும் கவிதைக்கும் அழகு
     மிதமிஞ்சிய மூப்பு கோரம்
- சிவதத்துவ சிவம்

காதல் - என் காதலியின் கடல்



என் காதலியின் கடல்

னும் என் காதலியும்
கடற்கரைக்கு சென்றோம்
கடல் நீரில் அவள் கூந்தல்
கசக்கினாள் கடல் கறுப்பானது
அவளே கண் திறந்தால்
கடல் நீலமானது
சட்டென்று சிரித்துவிட்டாள்
கடல் உள்வாங்கியது
திரும்பி நடந்தால் நுரைகளின்
இதயம் வெடித்து சிதறின
அவள் காலடிகளை
பின் தொடர்ந்தன அலைகள்
கதிரவனும் கடலும் சண்டையிட்டு
கொண்டன முடிவில் வென்றது கடல்
ஆம் இது என் காதலியின் கடல்
- சிவதத்துவ சிவம்
 

தத்துவம் - கடலைமிட்டாய் ஞானம்



கடலைமிட்டாய் ஞானம்

சின்ன ஆசை தானே என்று
காரணம் பல சொல்லி நிறைவேற்ற ஓடினேன்

தழல் வீரத்தை அறியாது
தொட செல்லும் குழந்தை போல்
காலத்தின் பலம் அறியாதே
நடவுக் செல்லும் விவசாயி போல்

ஆயிரம் ஆண்டுகள் எரிந்தாலும்
சோதியின் ஒளியை அணைத்தால்
ஒரு நொடிக்குள் இருள் சூழும்

நீர்தேக்கங்கள் எல்லாம் நிலா பிம்பங்கள்
விழுந்தாலும் நிலவை மேகங்கள் மறைத்தால்
ஒரு நொடிக்குள் அனைத்தும் மறையும்

ஆயிரமாயிரம் தத்துவங்களால் பெற்ற
ஞானமனாலும் அகங்காரம் விழுந்து கலந்தால்
ஒரு நொடிக்குள் அனைத்தும் அஞ்ஞானம் ஆகும்

அகந்தையால் கெளுத்தபட்ட ஆசை
சிறிதே எரிந்தாலும் பெரிதாய் அனல் கக்கும்
ஆசை அறுக்கவேணும் அதனோடு
ஆசை அறுப்பவனையும் சேர்த்தே அறுக்கவேணும்
ஞானத்தில் சின்ன ஞானம் பெரிய ஞானம் என்று இரண்டில்லை

- சிவதத்துவ சிவம்

வாழ்க்கை - சில தருணங்களே


சி தருணங்களே

ரவு இட்டுச் சென்ற பனித்துளி
முகில்கள் முட்டிச் செல்லும் மலைஉச்சி
துணையை கட்டிக் கொண்ட உறக்கம்
கனவை விட்டு வந்த தூக்கம்
மடியை முட்டிக் குடிக்கும் தாய் பால்
பூச்செடியை நட்டு பறிக்கும் முதல் மலர்
மூன்று முடிச்சை இட்டு மகிழும் கணங்கள்
கார்மேகக் கட்டு அவிழ்ந்து விழும் மழை
செல்பேசியில் திட்டும் காதலியின் குரல்
பிறந்திருக்கும் குட்டியின் மெல்லழகு
நெஞ்சை தட்டிக் கொடுத்த தாயின் தாலாட்டு
முதுகை தட்டி கொடுக்கும் குருவின் பாராட்டு
மனம் கட்டுக்குள் நின்றபோது துளிர்த்த ஆனந்தம்
- சிவதத்துவ சிவம்

 

Powered by Blogger