தத்துவம் - கடலைமிட்டாய் ஞானம்



கடலைமிட்டாய் ஞானம்

சின்ன ஆசை தானே என்று
காரணம் பல சொல்லி நிறைவேற்ற ஓடினேன்

தழல் வீரத்தை அறியாது
தொட செல்லும் குழந்தை போல்
காலத்தின் பலம் அறியாதே
நடவுக் செல்லும் விவசாயி போல்

ஆயிரம் ஆண்டுகள் எரிந்தாலும்
சோதியின் ஒளியை அணைத்தால்
ஒரு நொடிக்குள் இருள் சூழும்

நீர்தேக்கங்கள் எல்லாம் நிலா பிம்பங்கள்
விழுந்தாலும் நிலவை மேகங்கள் மறைத்தால்
ஒரு நொடிக்குள் அனைத்தும் மறையும்

ஆயிரமாயிரம் தத்துவங்களால் பெற்ற
ஞானமனாலும் அகங்காரம் விழுந்து கலந்தால்
ஒரு நொடிக்குள் அனைத்தும் அஞ்ஞானம் ஆகும்

அகந்தையால் கெளுத்தபட்ட ஆசை
சிறிதே எரிந்தாலும் பெரிதாய் அனல் கக்கும்
ஆசை அறுக்கவேணும் அதனோடு
ஆசை அறுப்பவனையும் சேர்த்தே அறுக்கவேணும்
ஞானத்தில் சின்ன ஞானம் பெரிய ஞானம் என்று இரண்டில்லை

- சிவதத்துவ சிவம்

0 Response to "தத்துவம் - கடலைமிட்டாய் ஞானம்"

Post a Comment

Powered by Blogger