தத்துவம் - வானத்தின் தொடக்கம்

வானத்தின் தொடக்கம்

ஓரு பெரிய எறும்பு சிறிய எறும்பு பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓர் எலி அந்த பெரிய எறும்பை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு பூனை அந்த எலியை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு நாய் அந்த பூனையை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு மனிதன் அந்த நாயை பார்த்து சொன்னான்
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு யானை அந்த மனிதனை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

இதை கேட்டுக் கொண்டிருந்த ஓரு கிழ மரம் சிரித்தது
உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
வானம் எங்கிருந்து தொடங்குகிறது என்று 
- சிவதத்துவ சிவம்

0 Response to "தத்துவம் - வானத்தின் தொடக்கம்"

Post a Comment

Powered by Blogger