தத்துவம் - கடலைமிட்டாய் ஞானம்



கடலைமிட்டாய் ஞானம்

சின்ன ஆசை தானே என்று
காரணம் பல சொல்லி நிறைவேற்ற ஓடினேன்

தழல் வீரத்தை அறியாது
தொட செல்லும் குழந்தை போல்
காலத்தின் பலம் அறியாதே
நடவுக் செல்லும் விவசாயி போல்

ஆயிரம் ஆண்டுகள் எரிந்தாலும்
சோதியின் ஒளியை அணைத்தால்
ஒரு நொடிக்குள் இருள் சூழும்

நீர்தேக்கங்கள் எல்லாம் நிலா பிம்பங்கள்
விழுந்தாலும் நிலவை மேகங்கள் மறைத்தால்
ஒரு நொடிக்குள் அனைத்தும் மறையும்

ஆயிரமாயிரம் தத்துவங்களால் பெற்ற
ஞானமனாலும் அகங்காரம் விழுந்து கலந்தால்
ஒரு நொடிக்குள் அனைத்தும் அஞ்ஞானம் ஆகும்

அகந்தையால் கெளுத்தபட்ட ஆசை
சிறிதே எரிந்தாலும் பெரிதாய் அனல் கக்கும்
ஆசை அறுக்கவேணும் அதனோடு
ஆசை அறுப்பவனையும் சேர்த்தே அறுக்கவேணும்
ஞானத்தில் சின்ன ஞானம் பெரிய ஞானம் என்று இரண்டில்லை

- சிவதத்துவ சிவம்

வாழ்க்கை - சில தருணங்களே


சி தருணங்களே

ரவு இட்டுச் சென்ற பனித்துளி
முகில்கள் முட்டிச் செல்லும் மலைஉச்சி
துணையை கட்டிக் கொண்ட உறக்கம்
கனவை விட்டு வந்த தூக்கம்
மடியை முட்டிக் குடிக்கும் தாய் பால்
பூச்செடியை நட்டு பறிக்கும் முதல் மலர்
மூன்று முடிச்சை இட்டு மகிழும் கணங்கள்
கார்மேகக் கட்டு அவிழ்ந்து விழும் மழை
செல்பேசியில் திட்டும் காதலியின் குரல்
பிறந்திருக்கும் குட்டியின் மெல்லழகு
நெஞ்சை தட்டிக் கொடுத்த தாயின் தாலாட்டு
முதுகை தட்டி கொடுக்கும் குருவின் பாராட்டு
மனம் கட்டுக்குள் நின்றபோது துளிர்த்த ஆனந்தம்
- சிவதத்துவ சிவம்

 

விதி - ஆமை முட்டை



ஆமை முட்டை

விதி என்ற வாகனம் குழப்பமான
கால வழித்தடங்களிலும் சரியாக போய் சேரும்
இயற்கை தன் நீதியை நிலை நிறுத்திக் கொள்ள
நகர்ந்து கொண்டே இருக்கும் அதன் நகருதலுக்கு
தடையாக நல்லதிருந்தாலும் தீயதிருந்தாலும் உடைபடும்
முட்டைகள் உடை பட்டு
வெளியேறும் ஆமை குஞ்சுகள்
சில கடலுக்கு செல்லலாம்
சில கடல்புறாவின் வயிற்றுக்கு செல்லலாம்
இது தெரிந்திருந்தும் தாய் ஆமை
குஞ்சுகளை விட்டு விட்டு கடலுக்கு செல்லும்
கடலை நோக்கி செல்லும் தன் உடன்பிறப்புகள்
கடல்புறாவின் அலகால் கவ்வப்படுவது
கண்டும் தன் காலடியை கடலை நோக்கியே வைக்கும்
ஆமை குஞ்சுகள்
- சிவதத்துவ சிவம்

 

மனிதம் - கருணை கூண்டு


கருணை கூண்டு

வளர்ப்பு பறவைகள் சிறிய கூண்டிற்குள்
பறந்து திரிகின்றன
அறுப்பு பறவைகள் பெரிய கூண்டிற்குள்
ஓரமாய் பயந்து படுத்துள்ளன
ஆகா கூண்டின் அளவிலேயே
தெரிகிறது மனிதர்களின் கருணை
                            - சிவதத்துவ சிவம்

தத்துவம் - வானத்தின் தொடக்கம்

வானத்தின் தொடக்கம்

ஓரு பெரிய எறும்பு சிறிய எறும்பு பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓர் எலி அந்த பெரிய எறும்பை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு பூனை அந்த எலியை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு நாய் அந்த பூனையை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு மனிதன் அந்த நாயை பார்த்து சொன்னான்
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு யானை அந்த மனிதனை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

இதை கேட்டுக் கொண்டிருந்த ஓரு கிழ மரம் சிரித்தது
உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
வானம் எங்கிருந்து தொடங்குகிறது என்று 
- சிவதத்துவ சிவம்

இயற்கை - மழைத்துளி



ழைத்துளி

மழையை போற்றி கவிதை தேடினேன்
துளிகள் மேல் விழுந்து வரிகள் தந்தன

மேகங்கள் போடும் மேளச் சத்தத்தில்
வானுக்கும் மண்ணுக்கும் திருமணம்

விகள் கோர்த்துத் தருவது கவிதை வரிகள்
முகில்கள் கோர்த்துத் தருவது தொடர் மழைத்துளிகள்

மழைத்துளிகள் வந்து நனைத்த லையின்
அழகை மின்னல்கள் வந்து படம் பிடிக்கும்

பூவினுள்ளே தேன் துளிகள் அதில்
விழுந்து நிறைந்தன மழைத்துளிகள்

காற்றே சிறகாய் வானில் பறக்கும் சாரல்களே
மழையில் குளித்த பச்சை இலைகளுக்கு
தலை துவட்டுவது யார் சொல்லுங்களே?

மழைத்துளிகள் வந்து மணல் துளியை நனைக்கும்
போது காற்றுத்துளிக்குள் வாசத்துளிகள்

எறும்புக் கூட்டங்கள் ஓடி ஒழியும்
தட்டான் கூட்டங்கள் கூடி அலையும்

மழைத்துளிகள் வந்து என் தோலில் விழுகையில்
என் ஒவ்வொரு மயிரிழையும் பூக்கும்

மேய்ந்து திரியும் கால்நடைகளுக்கு ஈரப் போர்வை போர்த்தும்
மழைத்துளிகளை குடித்து குடித்து வேர்கள் வயிற்றை நிரப்பும்

நகரத்தில் நீ விழுகையில்
நரகத்தில் நான் காண்பேன் சொர்க்கம்
                        - சிவதத்துவ சிவம்
 

Powered by Blogger